புதுடெல்லி: பிஹார் மாநிலம் பாட்னாவில் அகத்தியர் குறித்த ஒருநாள் கருத்தரங்கு இன்று (பிப்.26) நடைபெறுகிறது. காசி தமிழ் சங்கமத்தை ஒட்டி நடைபெறும் இந்நிகழ்வில், பிஹார் மாநில ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான் பங்கேற்கிறார்.
வட மற்றும் தென் மாநில மக்களை ஒன்றிணைக்க உத்தரப் பிரதேச மாநிலம் வாராணாசியில், காசி தமிழ் சங்கமங்கள் 2022-ம் ஆண்டு முதல் நடைபெறுகின்றன. இதன் முதல் சங்கமத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். இதன் மூன்றாவது ஆண்டாக கேடிஎஸ் 3.0 பிப்ரவரி 14-ல் துவங்கி பிப்ரவரி 24-ல் முடிந்தது. இதன் கருப்பொருளாக இடம்பெற்றிருந்த அகத்தியர் குறித்து, நாடு முழுவதும் கருத்தரங்குகள் நடத்த வேண்டுமென்று மத்திய கல்வி அமைச்சகம் கேட்டுக் கொண்டது.