ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே பாம்பனில் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் இருந்து ஞாயிற்றுக்கழமை நூற்றுக்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். பின்னர் மீன்பிடித்து விட்டு மீனவர்கள் கரை திரும்பினார்கள்.
மீனவர்கள் வலையில் டூம்ஸ் டே (இறுதி நாள்) மீன் என்றழைக்கப்படும் அரிய வகை ஆழ்கடல் மீனான (Oar Fish) எனப்படும் துடுப்பு மீன் சிக்கியது. இந்த மீன் 10 கிலோ எடையும், 5 அடி நீளமும் உடையதாகவும் இருந்தது. மன்னார் வளைகுடா கடற்பகுதியில் முதன்முறையாக இந்த மீன் பிடிபட்டதால் இந்த மீனை பாம்பன் மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.