முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு சால்வை அணிவிக்க முயன்ற அதிமுக நிர்வாகியை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மேடையிலேயே கன்னத்தில் அறைந்ததும், சிவகாசியில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் பாண்டியராஜனை பெயர் குறிப்பிடாமல் ஒருமையில் சாடியதும் விருதுநகர் மாவட்ட அதிமுக-வில் புகைந்து கொண்டிருந்த கோஷ்டி பூசலை வீதிக்கு கொண்டு வந்திருக்கிறது.
விருதுநகர் அதிமுக-வில் விருதுநகர் மேற்கு மாவட்டத்திற்கு ராஜேந்திர பாலாஜியும், கிழக்கு மாவட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் காளிமுத்துவின் தம்பி ரவிச்சந்திரனும் மாவட்டச் செயலாளர்களாக உள்ளனர். விருதுநகர் மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்தாலும் ஒன்றுபட்ட விருதுநகர் மாவட்ட அதிமுக-வின் முகமாகவே இருப்பவர் ராஜேந்திர பாலாஜி.