கராச்சி: நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் குரூப் சுற்றில் ‘பி’ பிரிவில் முதலிடம் பிடித்துள்ளது தென் ஆப்பிரிக்கா. இதே பிரிவில் ஒரு வெற்றி கூட இல்லாமல் வெளியேறி உள்ளது இங்கிலாந்து அணி.
கராச்சியில் நடைபெற்ற குரூப் சுற்று போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 38.2 ஓவர்களில் 179 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோ ரூட் 37 ரன்கள் எடுத்தார்.