புதுடெல்லி: உ.பி.யின் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி 13 முதல் மகா கும்பமேளா நடைபெறுகிறது. 144 வருடங்களுக்கு பிறகு வந்துள்ளதாகக் கருதப்படும் இந்த நிகழ்வு, திரிவேணி சங்கமத்தில் தொடர்கிறது. இந்த விழா பிப்ரவரி 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேதிகளை நாடு முழுவதிலும் உள்ள துறவிகளின் சபைகளான 13 அகாடாக்கள் முடிவு செய்கின்றன. இதில் அரசு தலையிட முடியாது.
மகா கும்பமேளாவில் நேற்று வரை 54 கோடிக்கும் அதிகமானவர்கள் வந்து புனிதக்குளியலை முடித்துள்ளனர். மகா கும்பமேளாவில் குவியும் கூட்டம் குறைவதாகத் தெரியவில்லை. மகா கும்பமேளாவிற்கு வருபவர்கள் அதன் அருகிலுள்ள வாராணசியின் காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் அயோத்தி ராமர் கோயிலுக்கும் செல்கின்றனர். இதன் காரணமாக அந்த இரண்டு நகரங்களிலும் கூட கூட்டம் குவிகிறது.