குடியரசுத் தலைவர் மாளிகையில் முதல்முறையாக பெண் சிஆர்பிஎப் அதிகாரிக்கு திருமணம் நடைபெற உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடிக்கு பெண் அதிகாரி ஒருவர் பாதுகாப்பு வழங்கும் புகைப்படம் கடந்த ஆண்டு நவம்பரில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அந்த பெண் அதிகாரி யார் என்ற கேள்வி நாடு முழுவதும் எதிரொலித்தது. இதுதொடர்பாக முன்னணி ஊடகங்கள் புலன் விசாரணை நடத்தி, பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அளித்தது சிஆர்பிஎப் படையை சேர்ந்த பெண் அதிகாரி பூனம் குப்தா என்று விளக்கம் அளித்தன. இவர் பிரதமருக்கான பாதுகாப்பு படையில் இல்லை. குடியரசுத் தலைவரின் பாதுகாப்பு படையில் இருக்கிறார் என்றும் ஊடகங்கள் சுட்டிக் காட்டின.