புதுடெல்லி: பிரதமரின் முதன்மை செயலராக சக்திகாந்த தாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ரிசர்வ் வங்கியின் 25-வது கவர்னராக கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பரில் நியமிக்கப்பட்ட சக்திகாந்த தாஸ், அப்பதவியில் இருந்து கடந்த 2024 டிசம்பர் 10-ம் தேதி ஓய்வு பெற்றார். இந்த சூழலில் பிரதமரின் முதன்மை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மோடியின் பதவிக்காலம் அல்லது மறு உத்தரவு வரும் வரை இவர் அப்பதவியில் நீடிப்பார்.