ஊழல் அல்லது கடுமையான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகி தொடர்ந்து 30 நாட்கள் சிறைக்காவலில் வைக்கப்பட்டால் ஓர் அமைச்சரோ, ஒரு மாநில முதல்வரோ, ஏன் நாட்டின் பிரதமரோ பதவி பறிப்புக்கு உள்ளாக வழிவகை செய்யும் சட்ட மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வியாழக்கிழமையுடன் முடியவிருக்கும் நிலையில், செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யப்பட்ட இந்த மசோதா மூலம் ஒரு புயலைக் கிளப்பியுள்ளது மத்திய அரசு.
இந்த மசோதாவை மக்களவையில், கடும் அமளி துமளிகளை மீறியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். அப்போது, அந்த மசோதாவின் நகல்களை கிழித்து அவரது முகம் நோக்கி எறியப்பட்ட சம்பவமும் அரங்கேறியது. இந்த மசோதாவைப் பற்றியும், அதனை எதிர்க்கட்சிகள் ஏன் இவ்வளவு ஆவேசமாக எதிர்க்கின்றன என்பது பற்றியும் சற்று விரிவாகப் பார்ப்போம்.