புதுடெல்லி: மூன்று நாள் சுற்றுப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ள பிஜி பிரதமர் சிதிவேனி லிகமமடா ரபுகா, பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது இருநாடுகளுக்கிடையில் பாதுகாப்பு, வர்த்தகம் தொடர்பான 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதுகுறித்து பிரதமர் மோடி கூறியுள்ளதாவது: இந்தியா மற்றும் பிஜியின் கடல்கள் வேறுபட்டிருக்கலாம். ஆனால், எங்களின் விருப்பங்கள் ஒரு படகில் பயணிக்கின்றன. பாதுகாப்பு உள்ளிட்ட இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்துவதற்கான ஒரு பரந்த செயல் திட்டத்தை உருவாக்கிட இந்தியாவும், பிஜியும் உறுதிபூண்டுள்ளன.