புதுடெல்லி: இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க 17-க்கும் மேற்பட்ட நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன.
இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து சூப்பர்சானிக் ஏவுகணைகளை தயாரிக்க கடந்த 1998-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தன. இந்தியாவின் பிரம்மபுத்திரா நதி (Brahmaputra), ரஷ்யாவின் மோஸ்க்வா (Moskva) நதிகளின் பெயர்களில் இருந்து புதிய சூப்பர்சானிக் ஏவுகணைக்கு பிரம்மோஸ் (BrahMos) என்று பெயரிடப்பட்டது. படைப்பின் கடவுளான பிரம்மனின் வலிமைமிக்க ஆயுதமான பிரம்மாஸ்திரத்தை முன்னிறுத்தியும் இந்த பெயர் தேர்வு செய்யப்பட்டது.