சிக்கன் பிரியாணி சாப்பிடும்போது பெண்ணின் தொண்டையில் எலும்பு சிக்கியதால் அவர் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டு உயிருக்குப் போராடும் நிலை ஏற்பட்டது. 8 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அந்த எலும்பு அகற்றப்பட்டதால் தற்போது அந்த பெண் நலமாக உள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் ரூபி ஷேக் (பெயர் மாற்றப்பட்டது). 34 வயதாகும் இவர் 2 குழந்தைகளுக்கு தாய் ஆவார். இவரது கணவர் ஷேக், மும்பையிலுள்ள தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார்.