பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், 6-ம் நிலை வீரரும் 24 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றுள்ள செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சுடன் மோதினார்.
3 மணி நேரம் 16 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜன்னிக் சின்னர் 6-4 7-5 7-6(3) என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். பிரெஞ்சு ஓபன் தொடரின் ஓபன் எராவில் (1968-ம் ஆண்டுக்கு பிறகு) இறுதிப் போட்டிக்கு முன்னேறிய 2-வது இத்தாலி வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ஜன்னிக் சின்னர். இதற்கு முன்னர் 1976-ம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் தொடரில் இத்தாலியின் அட்ரியானோ பனாட்டா சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.