
பாட்னா: பிஹாரின் பாகல்பூரை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் அஸ்வினி குமார் சவுபே. முன்னாள் மத்திய அமைச்சரான இவர் பாகல்பூரில் செல்வாக்குமிக்க தலைவராக விளங்குகிறார். இவரது மகன் அர்ஜித் சரஸ்வத் சவுபே (43). பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் அர்ஜித்துக்கு சீட் கிடைக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், பாகல்பூர் சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளராக ரோஹித் பாண்டே என்பவர் அறிவிக்கப்பட்டார். இதற்கு அர்ஜித் கடும் எதிர்ப்பை பதிவு செய்தார். பாஜக வேட்பாளருக்கு எதிராக சுயேச்சையாக பாகல்பூர் தொகுதியில் போட்டியிடுவேன் என்று அறிவித்தார்.

