ராகுல் திராவிட் என்னும் இந்தியப் பெருஞ்சுவர் ஓய்வு பெற்ற பிறகே இந்திய அணியில் 2010-ம் ஆண்டு நுழைந்த செடேஷ்வர் புஜாரா கிட்டத்தட்ட ராகுல் திராவிட்டின் அனைத்து திறமைகளையும் குறிப்பாக டெஸ்ட் போட்டித் திறமைகளை 3ம் நிலையில் அப்படியே கொண்டு வந்தார். ராகுல் திராவிட் போன பிறகு அவரைப் போலவே இந்திய அணிக்குக் கிடைத்த பொக்கிஷம்தான் புஜாரா.
இவரை இந்திய கிரிக்கெட் வாரியம் இன்னும் கொஞ்சம் கண்ணியமாக நடத்தி அவருக்குரிய மரியாதையுடன் பிரியாவிடை கொடுத்திருக்கலாம். கோலி என்னும் மாவீரனும் இப்படித்தான் கடைசி பிரியாவிடையை மைதானத்தில் கொடுக்காமலேயே டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றது பெரிய வருத்தம்தான். எப்படி திராவிட், சச்சின், லஷ்மண் இந்திய நடுவரிசையை ஒரு காலத்தில் தாங்கிப் பிடித்தார்களோ, இவர்கள் ஓய்வுக்குப் இறகு புஜாரா, கோலி, ரஹானே என்று கூறலாம்.