புதுடெல்லி: புதிய வந்தே பாரத், நமோ பாரத், அம்ரித் பாரத் ரயில்கள் தயாரிக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் தெரிவித்துள்ளார்.
ரயில்வேக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்தார். அப்போது அவர், “பிரதமர் மோடியின் காலத்தில், அனைத்து ரயில்களும் மின்சார ரயில்களாக மாற்றப்படும். வந்தே பாரத் ரயில்களை கூடுதலாக இயக்க அனைத்து பகுதிகளிலிருந்தும் கோரிக்கைகள் வருகின்றன. 50 புதிய வந்தே பாரத் அமரும் பெட்டிகள் தயாரிக்கப்படும். 260 புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர்கள் தயாரிக்கப்படும். 100 புதிய அம்ரித் பாரத் ரயில்கள் தயாரிக்கப்படும். 50 புதிய நமோ பாரத் ரயில்களுடன் 50 புதிய மெமுக்கள் (MEMU) தயாரிக்கப்படும்.