சென்னை: சென்னைக்கு அருகில் ரூ.10,000 கோடி முதலீடு ஈர்ப்பதுடன் 20,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் வகையில் சர்வதேச தரத்தில் ஒரு பிரத்யேக தைவானிய தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று பேரவையில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அறிவித்துள்ளார். பேரவையில் இன்று (ஏப்.25) தொழில் துறை மானியக் கோரிக்கை மீதான கேள்விகளுக்கு பதிலளித்து, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்டுள்ள புதிய அறிவிப்புகளின் விவரங்கள் இதோ…
> தமிழ்நாட்டில் ஈர்க்கப்படும் அந்நிய நேரடி முதலீட்டில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்ட தைவான் நாட்டு நிறுவனங்களுக்கு, உதிரி பாகங்கள் தயாரிக்கும் உற்பத்தியாளர்களுக்கென சென்னைக்கு அருகில் ரூ.10,000 கோடி முதலீடு ஈர்ப்பதுடன் 20,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் சர்வதேச தரத்தில் ஒரு பிரத்யேக தைவானிய தொழில் பூங்கா அமைக்கப்படும்.