புதுச்சேரி: “வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நான் போட்டியிடுவது தொடர்பாக கட்சித்தலைமைதான் முடிவு எடுக்கும். நான் கட்சியின் சாதாரண தொண்டன்” என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரிக்கான திட்டங்கள் இல்லை. புதுச்சேரியை புறக்கணிக்கும் இப்பட்ஜெட்டை விமர்சித்தால் பதவி பறிபோகும் என முதல்வர் பாராட்டியுள்ளார். மத்திய பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி விமர்சித்தால் மறுநாள் அவருக்கு முதல்வர் நாற்காலி இருக்காது என்பதால்தான் வரவேற்றுள்ளார். மீனவர்களை கைது செய்து படகுகளை பறிமுதல் செய்யும் பிரச்சினையை ஏன் தீர்க்கவில்லை.