புதுச்சேரி: குடிநீர் பாதிக்கப்பட்டுள்ள நகரப்பகுதிகளில் வீடுதோறும் 20 லிட்டர் சுத்திகரிப்பட்ட குடிநீர் கேன் இலவசமாக தரும் திட்டம் தமிழ் புத்தாண்டில் தொடங்கும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்தார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது இன்று சுயேட்சை எம்எல்ஏ நேரு, திமுக எம்எல்ஏ அனிபால் கென்னடி ஆகியோர், “நகரப்பகுதியில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரின் அளவு பல மடங்கு உயர்ந்துள்ளதால் அந்த குடிநீர் உகந்ததாக இல்லை. ஆனால் அந்த நீரே மக்கள் குடிக்க விநியோகிக்கப்படுகிறது. " என்று குற்றம் சாட்டி கேள்வி எழுப்பினர்.