“இங்கிலாந்துக்கு எதிராக 2 முக்கியமான டெஸ்ட் போட்டிகளில் பும்ரா ஆடாமல் விலகியது இந்திய அணியின் தொடரை வெல்லும் வாய்ப்புகளைக் கெடுத்து விட்டது. பும்ரா தான் விளையாடும் போட்டிகளை அவரே தேர்வு செய்ய அனுமதிக்க முடியாது” என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் சாடியுள்ளார்.
“தேச அணிக்கு எப்போது தேவைப்படுகிறதோ அப்போது அந்த வீரர் தயாராகத்தான் இருக்க வேண்டும். அணியில் தேர்வான பிறகே இந்தப் போட்டியில் ஆடுவேன், அதில் ஆட மாட்டேன், தொடரில் 3 போட்டிகளில் தான் ஆடுவேன் என்பதையெல்லாம் பும்ரா தேர்வு செய்ய அனுமதிக்கக் கூடாது” என்கிறார் அசார்.