மும்பை: புரோ கபடி 12-வது சீசன் வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. 12 அணிகள் கலந்து கொள்ளும் இந்தத் தொடரின் ஆட்டங்கள் இம்முறை விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர், சென்னை, டெல்லி உள்ளிட்ட 4 நகரங்களில் நடைபெறுகின்றன.
புரோ கபடி லீக்கின் 2025-ம் ஆண்டு சீசனின் முதற்கட்ட போட்டிகள் ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 11 வரை விசகாப்பட்டினத்தில் நடைபெறுகிறது. ஏழு வருட இடைவெளிக்குப் பிறகு விசாகப்பட்டினத்துக்கு புரோ கபடி லீக் போட்டிகள் திரும்பி உள்ளன. இங்கு கடைசியாக 2018-ம் ஆண்டு 6-வது சீசன் போட்டிகள் நடைபெற்றன.