ராமேசுவரம் மாவட்டத்தில் உள்ள தனுஷ்கோடி பகுதியானது பூநாரை பறவைகள் சரணாலயமாக மாற்றப்படுவதுடன், வெள்ளிமலை, ஆழியாறு பகுதிகளுக்கு நவீன நீரேற்று மின் திட்டங்கள் ரூ.11,721 கோடியில் உருவாக்கப்பட உள்ளன.
தமிழகத்தின் மின் தேவை 2 மடங்கு உயரும் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், 2030-ம் ஆண்டுக்குள் 100 பில்லியன் யூனிட் புதுப்பிக்கத்தக்க பசுமை ஆற்றலை (கிரீன் எனர்ஜி) உருவாக்க தமிழக அரசு திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக வெள்ளிமலை பகுதியில் 1,100 மெகாவாட் திறன் மற்றும் ஆழியாறு பகுதியில் 1,800 மெகாவாட் திறன் கொண்ட நீரேற்று மின் திட்டங்கள் ரூ.11,721 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட உள்ளன.