பெண்களின் தேசம் இந்தியா, பெண்களை சக்தியாக கொண்டாடும் நாடு இந்தியா என்பதை நிரூபிக்கும் வகையில், மகா சக்திகளாக தலைமையேற்று விங் கமாண்டர் வியோமிகா சிங், கர்னல் சோபியா குரேஷி ஆகியோர் பாகிஸ்தானில் நடத்திய ஆக்ரோஷ தாக்குதல் உலகையே வியக்க வைத்துள்ளது.
காஷ்மீரின் பகல்ஹாம் தீவிரவாத லுக்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள 9 தீவிரவாத மையங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலை தலைமையேற்று நடத்தியவர்கள் 2 பெண்கள் என்பதை அறிந்து உலகம் ஆச்சரியப்பட்டது.