புதுடெல்லி: பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை வழங்கும் திட்டத்துக்கு முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான டெல்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த மாதம் 5-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 48 இடங்களில் பாஜக வெற்றி பெற்று சுமார் 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் ஆட்சியமைத்துள்ளது. இந்நிலையில், டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றார். சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் மகளிருக்கு மாதம்தோறும் ரூ.2,100 உதவித்தொகை வழங்கப்படும் என ஆம் ஆத்மி கட்சி அறிவித்திருந்த நிலையில், பாஜகவின் தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு மாதம்தோறும் ரூ.2,500 உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.