சென்னை: தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளர் தாக்கல் செய்திருந்த மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழக விதிகளுக்குப் புறம்பாக அரசின் முன்அனுமதி பெறாமல் பெரியார் பல்கலைக்கழக தொழில்நுட்ப தொழில் முனைவோர் மற்றும் ஆராய்ச்சி பவுண்டேசன் என்ற பெயரில் தனி அமைப்பை அரசு நிதியில் தொடங்கியுள்ளதாகக்கூறி துணைவேந்தர் ஆர்.ஜெகந்நாதன் உள்ளிட்டோருக்கு எதிராக பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் சார்பில் இளங்கோவன் என்பவர் போலீஸில் புகார் அளி்த்திருந்தார்.