சென்னை: எரிபொருளை சேமிக்கும் வகையில், பொதுமக்கள் அனைவரும் பொதுப் போக்குவரத்தை அதிகளவில் பயன்படுத்த வேண்டும் என உணவு துறை அமைச்சர் சக்கரபாணி வேண்டுகோள் விடுத்தார்.
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சகத்தின் சார்பில், எரிபொருள் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ‘சக்ஷம் 2025’ நிறைவு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், அமைச்சர் சக்கரபாணி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பின்னர், விழாவில் அவர் பேசியதாவது: