புதுச்சேரி: பொதுக்கூட்ட பேச்சுகள் தொடர்பான அவதூறு வழக்குக்காக நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விசிக தலைவர் திருமாவளவனுக்கு விலக்கு அளித்து நீதிபதி இன்று உத்தரவிட்டார்.
புதுவை வெங்கடசுப்பா ரெட்டியார் சதுக்கம் அருகே 2014-ம் ஆண்டு நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவதூறாகப் பேசியதாக உருளையன்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு மீதான விசாரணை புதுவை 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.