
திருப்பூர்: ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்டமாக இருந்த வெள்ளக்கோவில் கல்லமடை அருகில் 2005-ல் தேமுதிக சார்பில், விஜயகாந்த் நற்பணி மன்றம் மூலம் 1.90 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு, பயனாளிகளுக்கு வீட்டு மனைகளாகப் பிரித்து வழங்க முடிவு செய்யப்பட்டது. அதேபோல, சத்தியமங்கலம் பகுதியில் 1.10 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது.
அப்போதைய தேமுதிக மாவட்டத் தலைவர் சந்திரகுமார் பெயரில் அந்த நிலம் பத்திரப் பதிவு செய்யப்பட்டு, அதன் பவர் ஆவணம் கட்சியின் மாநிலப் பொருளாளர் பெயரில் எழுதப்பட்டது. தலா இரண்டே கால் சென்ட்டாக 75 வீட்டுமனைகள் பிரிக்கப்பட்டு, 33 பேருக்கு முதலில் வழங்கப்பட்டு, மீதி ஒரு ஏக்கர் அளவு நிலம் வழங்கப்படாமல் இருந்தது. விஜயகாந்த் நகர் என்ற பெயரும் சூட்டப்பட்டது.

