மதுரை: பொன் மாணிக்கவேல் மீதான சிபிஐ வழக்கு விசாரணைக்கு ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்தது. ஓய்வு பெற்ற காவல் அதிகாரி பொன் மாணிக்கவேல் மனு தாக்கல் செய்திருந்தார். மறுஉத்தரவு பிறப்பிக்கப்படும் வரை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கூடாது. பொன் மாணிக்கவேல் பொறுப்பேற்பதற்கு முன்பும், பின்பும் எத்தனை வழக்குகள் பதிவு? என்பது குறித்து சிபிஐ தரப்பில் கூடுதல் விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை நீதிபதி மார்ச் 17க்கு ஒத்திவைத்தார்.
The post பொன் மாணிக்கவேல் மீதான சிபிஐ வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது ஐகோர்ட் கிளை appeared first on Dinakaran.