போயிங் விமானத்தில் குறைபாடுகள் இருப்பதாக அமெரிக்க பொறியாளர் சாம் சலேபோர் உண்மையை உடைத்துள்ளார். 12.06.2025 நேற்றைய =தினம் அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட விமானம் 30 நிமிடங்களில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 242 பேர் பயணம் செய்த நிலையில் 241 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் அருகில் இருந்த பயிற்சி மருத்துவ கேன்டீனில் நுழைந்தது இதில் 80 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இத்தகைய கோர விபத்திற்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்களும், அதிகாரிகளும் இரங்கல் தெரிவித்தனர். இன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி விபத்து நடைபெற்ற இடத்தை பார்வையிட்டார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வேண்டிய அனைத்து தேவைகளை செய்வதற்கும் உத்தரவிட்டார். இந்த நிலையில்,
போயிங் 787 -8 ட்ரீம் லைனர்’ ரக விமானங்கள் குறித்து அமெரிக்க பொறியாளர் சாம் சலேபோர் உண்மையை உடைத்தார். அதில்,
*போயிங் 787 ‘ட்ரீம்லைனர்’ ரக விமானங்கள் காலப்போக்கில் பெரும் விபத்துகளில் சிக்கும் என பலமுறை எடுத்துரைத்துள்ளேன்.
*அதன் உற்பத்தியில் சில குறைபாடுகளை கவனித்தேன், 2 Fuselage எனப்படும் விமான பாகங்களை இணைக்கும்போது, சரியான இணைப்பு முறைகள் பின்பற்றப்படவில்லை.
*பொருந்தாத பாகங்கள் மீது ஊழியர்கள் ஏறி குதித்து அவற்றை சரி செய்தனர். ஆயிரக்கணக்கான பயணங்களுக்குப் பின் இந்த குறைபாடு பேரழிவை ஏற்படுத்தும்.
*மாசுபடிந்த குழாய்கள் விமானத்தின் ஆக்ஸிஜன் அமைப்பில் பொருத்தப்படுகின்றன, அவை முறையாக சுத்திகரிக்கப்படாவிட்டால் பெரும் வெடி விபத்துக்கு வழிவகுக்கும்.
The post போயிங்-ல் குறைபாடு: உண்மையை உடைத்த அமெரிக்க பொறியாளர் சாம் சலேபோர் appeared first on Dinakaran.