பெக்கன்ஹாம்: ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 20-ம் தேதி ஹெட்டிங்லியில் தொடங்குகிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு கட்டமாக இந்தியா ஏ, இந்தியா அணிகள் மோதும் பயிற்சி ஆட்டம் பெக்கர்ஹாமில் இன்று தொடங்குகிறது.
இந்நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர் வீரர்கள் மத்தியில் உரையாடுவதை பிசிசிஐ தனது இணையதளத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளது. அதில் கவுதம் கம்பீர் கூறும்போது, “இந்த சுற்றுப்பயணத்தை இரண்டு விதமாகப் பார்க்கலாம். ஒன்று, மிகவும் அனுபவம் வாய்ந்த எங்களது 3 வீரர்கள் (ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின்) ஆகியோர் இல்லாமல் இருக்கிறோம் அல்லது நாட்டிற்காக ஏதாவது சிறப்பாகச் செய்ய இந்த அற்புதமான வாய்ப்பைப் பெற்றுள்ளோம்.