போபால்: அரசு வேலை வாய்ப்புகளில் மத்தியப் பிரதேச பாஜக அரசு பாம்பு போல அமர்ந்திருப்பதாக குற்றம்சாட்டி, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை வளாகத்தில் கையில் பிளாஸ்டிக் பாம்புகளுடன் இன்று போராட்டம் நடத்தினர்.
எதிர்க்கட்சித் தலைவர் உமாங் சிங்கர் தலைமையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு முன்பாக பிளாஸ்டிக் பாம்பு மற்றும் கூடைகளுடன் கூடி மாநிலத்தின் இளைஞர்களுக்கு வேலை தர அரசு தவறிவிட்டதாக முழக்கங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர்.