திருமலை: ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் மனைவி அன்னா லெஸ்னவா திருமலையில் தலைமுடி காணிக்கை செலுத்தினார். மேலும் அன்னதானத்துக்கு ரூ.17 லட்சம் நன்கொடையும் அவர் வழங்கினார்.
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் இளைய மகன் மார்க் சங்கர். இவர் சிங்கப்பூரில் பள்ளி படிப்பு படித்து வருகிறார். இவர் படிக்கும் பள்ளியில் அண்மையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் மார்க் சங்கர் உட்பட பலர் தீக்காயமடைந்தனர். ஒரு மாணவி உயிரிழந்தார். இந்த தகவலை அறிந்ததும் பவன் கல்யாண், சிங்கப்பூர் சென்று தனது இளைய மகனை அங்கிருந்து இந்தியாவுக்கு அழைத்து வந்தார். தற்போது ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் மார்க் சங்கர் சிகிச்சை பெற்று வருகிறார்.