புதுடெல்லி: சர்வதேச மகளிர் தினமான இன்று (மார்ச் 8), 'பெண் சக்தி'க்கு மரியாதை செலுத்தும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக ஊடக கணக்குகளை மகளிர் வசம் ஒப்படைத்துள்ளார்.
மகளிர் தினத்தை முன்னிட்டு தனது சமூக ஊடக கணக்குகளை மகளிர் வசம் ஒப்படைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே கூறி இருந்தார். இந்நிலையில், மகளிர் தினத்தை முன்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "மகளிர் தினத்தன்று நமது பெண் சக்திக்கு தலைவணங்குகிறேன்! நமது அரசாங்கம் எப்போதும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக பாடுபட்டுக்கொண்டிருக்கிறது. அவை நமது அரசின் திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் வெளிப்பட்டு வருகின்றன. ஏற்கனவே அளித்த வாக்குறுதிப்படி, பல்வேறு துறைகளில் முத்திரை பதிக்கும் பெண்களிடம் எனது சமூக ஊடக கணக்குகள் ஒப்படைக்கப்படும்" என்று கூறியுள்ளார்.