புதுடெல்லி: பொதுமக்கள் திரளாகக் கூடும் இடங்களில் குடும்ப உறுப்பினர்கள் காணாமல் போவதும், பிறகு சேர்வதும் வழக்கமாக நடைபெறுகிறது. பல கோடி பேர் கூடும் மகா கும்பமேளாவில் இது அதிகமாகவே நடைபெற்று வருகிறது.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த மாதம் 13-ம் தேதி மகா கும்பமேளா தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி 28-ம் தேதி மவுனி அமாவாசையன்று கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயினர். அவர்களையும் சேர்த்து உ.பி. அரசின் ‘கோயா பாயா’ (தொலைந்தவர்கள் – கண்டுபிடிக்கப்பட்டவர்கள்) பிரிவினர் சுமார் 13,000 பேரை மீட்டு சாதனை புரிந்துள்ளனர்.