புதுடெல்லி: மகா கும்பமேளாவின் காவல்நிலையத்தில் பதிவான வழக்குகளில் 471 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவை அனைத்தும் பிரயாக்ராஜ் மாநகரக் காவல்நிலையங்களின் விசாரணை இன்று ஒப்படைக்கப்பட்டன.
உத்தரப்பிரதேசம் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி 13-ல் துவங்கி 45 நாட்களுக்கு மகா கும்பமேளா நடைபெற்றது. 66 கோடி பேர் வந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிச் சென்றிருந்தனர். இவர்கள் அளிக்கும் புகார்களுக்காக, திரிவேணி சங்கமக் கரையில் மொத்தம் 56 காவல் நிலையங்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்தன.