புதுடெல்லி: பிரயாக்ராஜின் மகா கும்பமேளாவில் வசந்த் பஞ்சமி புனித குளியலை முடித்துக் கொண்ட துறவிகளில் பலரும் வாராணசி, அயோத்திக்கு செல்கின்றனர்.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 144 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பமேளா நடைபெறுகிறது. இந்த விழா திரிவேணி சங்கம கரைகளில் கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கியது. இதில் மகர சங்கராந்தி, மகா பவுர்ணமி, மவுனி அமாவாசை, வசந்த் பஞ்சமி, மகா சிவராத்திரி என மொத்தம் 6 வகையான ராஜ குளியல் நிகழ்ச்சி இடம்பெறுகிறது. இவற்றில் 5-வது புனிதக் குளியல் கடந்த 3-ம் தேதி வசந்த் பஞ்சமியில் முடிந்தது.