பெங்களூரு: மத்திய பெங்களூரு மக்களவைத் தொகுதியின் கீழ் உள்ள மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் நடந்த ‘வாக்கு திருட்டு’ குறித்து விசாரித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை வைத்துள்ளார்
மக்களவைத் தேர்தலில் நடந்ததாக கூறப்படும் ‘வாக்கு திருட்டு’க்கு எதிராக பெங்களூரு நகரில் உள்ள ஃப்ரீடம் பார்க்கில் காங்கிரஸ் கட்சி இன்று பேரணி நடத்தியது. இந்தப் பேரணியில் கட்சித் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “2024 மக்களவைத் தேர்தலின்போது மத்திய பெங்களூரு தொகுதியில் பாஜகவின் வெற்றியை உறுதி செய்வதற்காக மகாதேவபுராவில் 1,00,250 போலி வாக்குகள் உருவாக்கப்பட்டன.