மகாராஷ்டிர மாநிலம் அகோலா நகரில் உள்ள தாய்ப்பால் வங்கியால் இதுவரை 3,800 பச்சிளம் குழந்தைகள் பயன் அடைந்து உள்ளதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறும்போது, “ அகோலா நகரில் கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் தாய்ப்பால் வங்கி தொடங்கப்பட்டது. மாவட்ட பெண்கள் மருத்துவமனையில் அமைக்கப்பட்ட இந்த தாய்ப்பால் வங்கியின் மூலம் கடந்த மூன்றரை ஆண்டுகளில் 3,816 பச்சிளம் குழந்தைகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.