சென்னை: “மக்காச்சோளத்துக்கு விதித்துள்ள செஸ் வரியை தமிழக முதல்வர் ரத்து செய்ய வேண்டும்” என்று தமாகா பொதுச் செயலாளர் எம்.யுவராஜா வலியுறுத்தி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில். “மக்காச்சோளத்துக்கு 1 சதவீத சந்தை வரியை, வேளாண் விற்பனைத்துறை மூலம் விதித்திருப்பது, அவர்களைக் கடும் அதிருப்திக்கு ஆளாக்கி இருக்கிறது. திமுக அரசு ஆட்சிக்கு வந்தது முதல் மக்கள் நலனுக்காக எதையுமே செய்யவில்லை. விலைவாசி பன்மடங்கு உயர்ந்து கொண்டே போகிறது. சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, தொடர்ந்து சிமெண்ட், செங்கல், மணல், ஆவின் பால் விலை, என பல அத்தியாவசிய பொருட்களின் விலைகளை உயர்த்தி மக்களை அவதியில் ஆழ்த்தியுள்ளார்கள்.