புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் மொரீஷியஸ் பயணத்தை, ‘அடிக்கடி பறக்கும் நேரம்’ (frequent flier time) என்று விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சி, ‘மணிப்பூர் மக்கள் இன்னும் பிரதமரின் வருகைக்காக காத்திருக்கிறார்கள்’ என்றும் சாடியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இது அடிக்கடி விமானப்பணம் செய்யும் நேரம், பிரதமர் இப்போது மொரீஷியஸ் சென்றுள்ளார். ஆனால் மணிப்பூரில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட பின்பும், அங்கு நிலைமை இன்னும் சீராகவில்லை.