புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் போதை விழிப்புணர்வு மராத்தான் போட்டியில், மதுபோதையில் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய மூவர் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். அங்கிருந்த குடிநீர் வாகனம், பைக்குகள் மீது இடித்து நின்ற காரில் இருந்த மூவரை அங்கிருந்தவர்கள் அடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், த.வெ.க. கொடி கட்டியியிருந்த காரில் வந்த மூவரும் காரைக்குடி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
The post மதுபோதையில் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய மூவர் மீது பொதுமக்கள் தாக்குதல்! appeared first on Dinakaran.