மதுரை : மதுரை சித்திரை விழாவை ஒட்டி மின்விளக்குகளுக்கு தேவையான மின்சாரத்தை மாநகராட்சியே வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மீனாட்சி கோயில் நிர்வாகம், மாநகராட்சிக்கு ரூ.1 கோடிக்கு மேல் மின்சார பயன்பாட்டு தொகை செலுத்த வேண்டியுள்ளது. தற்காலிக மின்இணைப்பு பெற்று மின்விளக்கு பயன்படுத்த மதுரை மாநகராட்சி ஆணையர் நேற்று கூறினார். மதுரை மாநகராட்சி ஆணையர் கருத்து சர்ச்சையான நிலையில் மின்சாரம் மாநகராட்சி வழங்கும் என மேயர் அறிவிப்பு வெளியிட்டார்.
The post மதுரை சித்திரை விழாவிற்கு தேவையான மின்சாரத்தை மாநகராட்சியே வழங்கும் என அறிவிப்பு!! appeared first on Dinakaran.