‘10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட மாநகராட்சிகளின் தூய்மை தரத்தில் மதுரைக்கு கடைசி இடம்’ என்ற மத்திய அரசின் அறிவிப்பை வைத்து மதுரையில் மார்க்சிஸ்ட்களும் திமுக-வினரும் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் நகர்புறங்களில் வசிக்கும் ஏழைகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி மக்களைத் திரட்டி பேரணி நடத்தினார் மதுரையின் மார்க்சிஸ்ட் எம்பி-யான சு.வெங்கடேசன். இதை ரசிக்காத திமுக-வினர், லோக்கல் அமைச்சரின் ஆலோசனைப்படி ஆங்காங்கே ஃபிளெக்ஸ்களை வைத்து சு.வெங்கடேசனை சுளீரெனக் கண்டித்தனர். பதிலுக்கு மார்க்சிஸ்ட்களும் திமுக-வினருக்கு எதிராக பொளேரென போஸ்டர்களை ஓட்டினர். தொடர்ந்து, திமுக மேடைகளில் சு.வெங்கடேசனை வம்புக்கிழுத்து வசைபாடினர்.