தொடர் விடுமுறையையொட்டி மதுரையில் இருந்து இன்று சென்னை வரும் ஆம்னி பேருந்துகளில் அதிகபட்சமாக ரூ.6 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது பயணிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது தமிழ்ப் புத்தாண்டுடன் தொடர் விடுமுறை முடித்து தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு ரயில்கள், படுக்கை வசதி கொண்ட அரசு பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காததால் ஆம்னி பேருந்தில் பயணி்க்க மக்கள் வருகின்றனர். ஆனால் அங்கு வசூலிக்கப்படும் கட்டணம் மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக மதுரையில் இருந்து சென்னை செல்ல அதிகபட்சமாக ரூ.6 ஆயிரமாகவும் நெல்லையில் இருந்து சென்னைக்கு குறைந்தபட்சமாக ரூ.1,900 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி 4 பேர் கொண்ட எனது குடும்பம் செல்ல ரூ.8 ஆயிரம் செலவழிக்க வேண்டியதால் வழிதெரியாமல் மக்கள் திணறுகிறார்கள்.