சென்னை: ‘பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்துவதற்கான திட்டத்தின் கீழ், உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்கள் அதிகளவு பயன்பெறும் வகையில், கடன் வழங்குவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நமது நாட்டில் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களில் மிகவும் குறைவான அளவே முதலீடு என்ற போதிலும், 74 சதவீத மக்களுக்கு வேலைவாய்ப்பினை அளித்து வருகிறது. எனினும், இந்நிறுவனங்கள் பெரும்பாலும் முறைப்படுத்தப்படாத நிலையில் உள்ளன. எனவே, இத்தகைய உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்களை திறம்படகையாளவும், நன்கு செயல்படும் குழுக்கள், கூட்டுறவு அமைப்புகள், புதிதாக உணவுப் பதப்படுத்தும் நிறுவனங்களை அமைக்கவும், ஏற்கெனவே இயங்கிவரும் நிறுவனங்களை மேம்படுத்தவும், ‘ஆத்மநிர்பர் பாரத் அபியான்’திட்டத்தின் ஒரு பகுதியாக, ‘பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்துவதற்கான திட்டம் செயல்படுத்தப்படுகிறது.