
மதுரை: தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்கள் மீது போலீஸார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்து, உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.
அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த சாஜிதா, பாத்திமா, இப்ராஹீம் உள்ளிட்டோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: முஸ்லிம் தலைவர்கள், இயக்கத்தினர் ஆகியோர் மீதான மத்திய அரசின் கைது நடவடிக்கையைக் கண்டித்து, அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே அமைதியான முறையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம்.

