சென்னை மெரினா கடற்கரையில் ஒரு இளம்பெண்ணின் உடல் கரை ஒதுங்கி இருக்கிறது. இதைப் பார்த்த அந்தப் பகுதிமக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க, போலீஸார் உடலை மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணை நடத்தியதில் அந்தப் பெண் சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த பிளஸ் 2 மாணவி என்பது தெரியவந்தது.
சமீபத்தில் நடந்து முடிந்தபிளஸ் 2 தேர்வுகளை அந்த மாணவி சரியாக எழுதவில்லை என்று தெரிகிறது. அதனால் தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோம் என்று சில நாட்களாக மன உளைச்சலுடன் இருந்திருக்கிறார். இதைத் தொடர்ந்து மாணவி தற்கொலை செய்து கொள்ளும் தவறான முடிவை எடுத்துள்ளார்.