புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில் மருத்துவ மாணவி ஒருவரை ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பி ஓடியது.
இதுகுறித்து முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் கூறும்போது, “மருத்துவ மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. அதேநேரம் நள்ளிரவு 12.30 மணிக்கு அவர்கள் கல்லூரி வளாகத்தைவிட்டு எப்படி வெளியில் சென்றனர்” என்றார்.