டெல்லி அருகேயுள்ள குருகிராமில் 9-ம் வகுப்பு மாணவியை மிரட்டி, அவரது பாட்டியின் வங்கி கணக்கில் இருந்த ரூ.80 லட்சத்தை மோசடி செய்த கும்பலை போலீஸார் கைது செய்து ரூ.35 லட்சத்தை மீட்டுள்ளனர்.
டெல்லி அருகேயுள்ள குருகிராமில் வசிக்கும் 15 வயது சிறுமி அங்குள்ள பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படிக்கிறார். இவரது பாட்டி, தனக்கு சொந்தமான நிலம் ஒன்றை விற்பனை செய்துள்ளார். அதன் மூலம் கிடைத்த ரூ.80 லட்சத்தை தனது வங்கி கணக்கில் சேமித்து வைத்துள்ளார்.