கொல்கத்தா: துர்காபூரில் மருத்துவ மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், மாணவிகள் இரவில் வெளியே செல்ல கல்லூரிகள் அனுமதிக்கக் கூடாது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "இந்த சம்பவத்தைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன், ஆனால் தனியார் மருத்துவக் கல்லூரிகளும் தங்கள் மாணவர்களை, குறிப்பாக பெண்களை கவனித்துக் கொள்ள வேண்டும். பெண்கள் இரவில் கல்லூரிக்கு வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது. பெண்களும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். சம்பவம் நடந்தது வனப்பகுதியாக உள்ளது. போலீசார் குற்றவாளிகள் அனைவரையும் தேடி வருகின்றனர்.